லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்காளத்தில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் முந்தைய அறிவிப்பின்படி வெளியிடப்பட்ட மே 9 முதல் மே 20ஆம் தேதி வரையிலான பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

school-student-summer-holiday-extend-in-bengal-info
அதன்படி வங்காள மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அம்மாநில பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.