இந்து அறநிலைத்துறையில் வெளியாகியுள்ள நல்லதொரு வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

இந்து அறநிலைத்துறையில் வெளியாகியுள்ள நல்லதொரு வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

இந்த ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை விண்ணப்பதாரர்கள் கவனமாக படித்து தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி விவரங்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் காலியாக உள்ள 4 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி

இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இங்கு வரும் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்த இந்து அறநிலைத்துறை பணியிடங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 9250 வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது விவரங்கள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்து அறநிலைத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchengodearthanareeswarar.hrce.tn.gov.in சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்,

திருச்செங்கோடு, நாமக்கல் – 637211

விண்ணப்ப தொடக்க தேதி: 25 செப்டம்பர் 2024

 

விண்ணப்ப கடைசி தேதி: 04 அக்டோபர் 2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *