கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியது என்ன முழு விவரம்

கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியது என்ன முழு விவரம்

 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக இன்று 21 மாவட்ட சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் விழா மேடைக்கு வருகை புரிந்த நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசிய விஜய், 

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் , அவர்களுடன் பெருமையாக வந்திருக்கும் அவரது பெற்றோருக்கும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க காரணமாக அமைந்துள்ள பொதுச்செயலாளர் ஆனந்துக்கும் , தமிழக வெற்றி கழகத்தினுடைய தோழர்களுக்கும், மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பர் நண்பிகளுக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்

வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு பின் பெற்றோர்களை விட அதிகமாக நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவிடக்கூடிய சூழல் ஏற்படும், அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.

தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் தலைவர்கள் உருவாக வேண்டும் . நான்கு படித்தவர்கள் அரசியலை தங்களின் லட்சியமாக வைத்துக் கொள்ளும் காலம் வரவேண்டும். ஒரு சில அரசியல் காட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எல்லா துறையுமே நல்ல துறை தான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100 சதவீதம் உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம் .அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள் என்றார்.

தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.

தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடாதீர்கள். ஈடுபடக் கூடாது. உங்களுடைய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள் என்று தெரிவித்த அவர் போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து விஜய் உறுதிமொழி எடுக்க வைத்தார்.

இந்த போதைப் பொருட்களை எல்லாம் கட்டுப்படுத்துவது அரசுடைய கடமைனு சொல்லலாம். இளைஞர்களை இதிலிருந்து காப்பாற்றுவதும் அரசின் கடமை, ஆளும் அரசு அதையெல்லாம் தவறவிட்டுட்டாங்க அப்படிங்கிறத பத்திலாம் நான் இங்கு பேச வரல. அதற்கான மேடையும் இது இல்ல. சில நேரங்களில் அரசாங்கத்தை விட நம்ம லைஃபை நாம தான் பாத்துக்கணும். சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். Say no to temporary Pleasures, say no to drugs என்கிற இந்த உறுதி மொழியை நீங்க எல்லாரும் கடைபிடிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *