மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் கல்வி வளர்ச்சி, அவர்களின் வாழ்வாதார வளர்ச்சி போன்றவைகளுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
![haapy news Are there any girls in your household Then read this message right away](https://jobstamil.in/wp-content/uploads/2023/08/haapy-news-Are-there-any-girls-in-your-household-Then-read-this-message-right-away-1024x576.webp)
அந்த வகையில், தமிழக அரசால் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மேற்கொலப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 50,000அந்த குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ. 25,000 என வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு முறையும் திட்டம் புதுப்பிக்கப்பட்டு குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தொகை வட்டியுடன் வழங்கப்படும்.
இந்நிலையில், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணபித்த பலரும் புதுபிகாததால் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களிலும் மாதந்தோறும் 2 வது செவ்வாய்க்கிழமைகளில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.