மகளீர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!

மகளீர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!

Magalir Urimai Thogai Happy News: பெண்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள் சுயதொழில் மூலம்  தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு மூலமாக லோன் வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிகக் குறைந்த அளவு  வட்டி மற்றும் அதிக மானியம் கிடைக்கிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை 20 இலட்சம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக தரமான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமிழக அரசானது மகளிர் உரிமைத் தொகையை பெண்களுக்கு மாதமாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதன் மூலம் பெண்கள் ஆண்களை நம்பி இருக்காமல் தன் குடும்பத் தேவைகளை இந்த பணத்தின் மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த மகளிர் உரிமைத் தொகையை பெரும்பாலான மகளிர் வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர் அப்படி சேமித்து வைக்கும் போது அந்த மகளிர் உரிமை தொகையின் வட்டி வீதமானது அதிகரிக்கிறது. இதன் காரணமாக மகளிர் உரிமைத் தொகையினை பெறும் மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்:

தமிழகத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” என்ற திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 அளவிலான நிதியுதவி பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மகளிரின் நலன் மற்றும் சுதந்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த திட்டம் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு பயன்படுகின்றது.

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதிகள்

மகளிர் உரிமைத் தொகை பெற அந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் இருக்க கூடாது, மற்றும் ஒரு ஆண்டிற்குப் பயன்படும் மின்சாரப் பயன்பாடு 3,600 யூனிட்களை மிஞ்சக்கூடாது என்பவை அடிப்படையாக உள்ளன. இந்த நிபந்தனைகள் திட்டத்தின் செயல்திறனை கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன.

மகளிர் உரிமைத் தொகை மகிழ்ச்சி  தகவல்:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இத்திட்டம் 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தற்போது சில மகளிர் உரிமைத் தொகை பெற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம், இந்த திட்டத்தின் நிபந்தனைகளை தளர்த்தி, திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.  தமிழக சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சர் மற்றும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுடைய  கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விடுபட்ட தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ஊரக உள்ளட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள அதற்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

திட்ட விரிவாக்கம்:

ஊரக உள்ளட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில் அதற்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் என பலரும் பயனடையும் வகையில் அந்த அறிவிப்பு அமையும் என்கிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *