தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்க்கான படிவங்கள் வழங்கபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு சிறப்பு முகாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.63 லட்சம் பேர் விண்ணபித்துள்ளதாகவும் இதுவரையில் சுமார் 79.66 லட்சம் வரை விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் உரிமை திட்டம் ஆனது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மறுமுறை விண்ணப்பம் பெறப்படும் என்றும் வரும் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.