தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு TNPSC வெளியிட்டது.
இந்நிலையில், இந்த பதவிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட நிலையில், உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை தற்பொழுது TNPSC வெளியிட்டுள்ளது.
![ltest-news-released-important-notice-for-tnpsc-candidates-candidates-dont-miss-and-read-tnpsc-gov-in-read-this-news-now](https://startamilexams.com/wp-content/uploads/2023/07/rftt-300x139.png)
ltest-news-released-important-notice-for-tnpsc-candidates-candidates-dont-miss-and-read-tnpsc-gov-in-read-this-news-now
இதையடுத்து, தேர்வர்கள் இந்த முடிவுகளை TNPSC யின் அதிகாரப்பூர்வ தளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் TNPSC AFC முதன்மை தேர்வு 13.08.2023 முதல் 20.10.2023 வரை நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.