நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்..! எதற்கு தெரியுமா?

சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை(ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம், செங்கோட்டை போன்ற மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ட்டுள்ளது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்ற உள்ளார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையின் எஸ்.பி பொன்ராம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் 100 காவலர்களும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *